திருக்குறள்

1180.

மறைபெறல் ஊராhக் கரிதன்றால் எம்போல் அறைபறை கண்ணார் அகத்து.

திருக்குறள் 1180

மறைபெறல் ஊராhக் கரிதன்றால் எம்போல் அறைபறை கண்ணார் அகத்து.

பொருள்:

காதல் வேதனையைப் பறைசாற்றிக் காட்டிக் கொடுக்க எம் கண்களேயிருக்கும்போது, யாம் மறைப்பதை அறிந்து கொள்வது ஊரார்க்குக் கடினமல்ல.

மு.வரததாசனார் உரை:

அறையப்படும் பறைபோல் துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய எம்மைப் போன்றவரிடத்தில் மறைபொருளான செய்தியை அறிதல் ஊரார்க்கு அரிது அன்று.

சாலமன் பாப்பையா உரை:

அடிக்கப்படும் பறைபோன்று மனத்துள் இருப்பதை அழுது வெளியே காட்டிவிடும் எம்போன்ற பெண்களின் ரகசியத்தை அறிந்து கொள்வது இவ்வூரில் இருப்பவர்க்கு எளிது.